பொதுத்தமிழ் என்பது தமிழ் மொழியின் அடிப்படை அறிவை வளர்க்கும் பாடமாகும். இதில் தமிழ் இலக்கணம் இலக்கியம் மொழித்திறன் பண்பாடு, வரலாறு மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்துகள் இடம் பெறுகின்றன. மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, பேச்சு மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் போட்டித் தேர்வுகள் மற்றும் அன்றாட வாழ்வில் தமிழ் மொழியைச் சரியாகப் பயன்படுத்த உதவும் அறிவையும் பொதுத்தமிழ் வழங்குகிறது.